/* */

மத்திய அரசின் மானிய உதவியுடன் தொழில் துவங்க விண்ணப்பம் செய்வது எப்படி?

Loan Subsidy Scheme -மத்திய அரசின் மானிய உதவியுடன் தொழில் துவங்க விண்ணப்பம் செய்வது எப்படி? என்பதை அறிய கீழே தொடர்ந்து படிக்கலாம்.

HIGHLIGHTS

மத்திய அரசின் மானிய உதவியுடன் தொழில்  துவங்க விண்ணப்பம் செய்வது எப்படி?
X

Loan Subsidy Scheme -மத்திய அரசின் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்கள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில்முனைவோர் மேம்பாடு, இறைச்சி, முட்டை, ஆட்டுப்பால் மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரித்தல், நாட்டின கால்நடைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு மானியத்துன் கூடிய கடன் உதவி வழங்கப்படுகிறது. மானியத்துடன் கீழ்க்கண்ட தொழில்கள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புறக்கடை கோழி வளர்ப்பு

தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 1000 தாய் முட்டைக் கோழிகள் கொண்ட தாய் கோழி பண்ணை கிராமப்புற குஞ்சு பொரிப்பகம் மற்றும் குஞ்சு பருவம் உடன் இணைந்த தாய்க் கோழி கொட்டகை ஆகியவற்றை நிறுவ வேண்டும். கோழி இனங்களை கூண்டுகளில் அல்லது திறந்த வெளி வளர்ப்பு அமைப்பில் பராமரிக்கலாம். தாய் கோழி கொட்டகை 3000 சதுரடி பரப்பளவிலும், குஞ்சு பொரிப்பக கட்டிடம் 3000 சதுரடி பரப்பளவிலும், குஞ்சு பருவம் உடன் இணைந்த தாய்க்கோழி கொட்டகை 4000 சதுரடி பரப்பளவிலும் நிறுவ வேண்டும். மானியம் ரூ. 25 லட்சம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

சிறிய பிராணிகள் வளர்ப்பு

இத்திட்டத்தின் மூலம் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 500 பெண் ஆடுகள் மற்றும் 25 ஆண் ஆடுகளுடன் செம்மறி, வெள்ளாட்டு இனப்பெருக்க நிலையத்தை நிறுவ வேண்டும். ஆட்டுப்பால், இறைச்சி மற்றும் சிறந்த தரத்திலான கம்பளி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உயர் மரபணு வகைகளுடனான நாட்டின ஆடுகளின் மூலம் பண்ணையை நிறுவ வேண்டும்.ஆட்டுக்கொட்டகை 5,500 சதுரடி பரப்பளவிலும், ஆட்டுக் குட்டிகளின் கொட்டகை 3,500 சதுரடி பரப்பளவிலும் நிறுவுவதோடு, தீவன உற்பத்திக்கென 5 ஏக்கர் நிலமும் வைத்திருக்க வேண்டும். மானியம் ரூ. 50 லட்சம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

பன்றி வளர்ப்பு

தனி நபர்கள்மற்றும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 100 பெண் பன்றிகள் மற்றும் 10 ஆண் பன்றிகளை கொண்ட இனப்பெருக்க பண்ணையை நிறுவ வேண்டும். பெண் பன்றிகளின் கொட்டகை 2,000 சதுரடி பரப்பளவிலும், ஆண் பன்றிகளின் கொட்டகை 700 அடி சதுரடி பரப்பளிவிலும், பிரசவிக்கும் பெண் பன்றிகளின் கொட்டகை 4,000 சதுரடி பரப்பளவிலும், பன்றிக் குட்டிகளின் கொட்டகை 30,000 சதுரடி பரப்பளிலும் நிறு வேண்டும். மானியம் ரூ. 30 லட்சம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

தீவன உற்பத்தி

தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உலர்புல், ஊறுகாய் புல், மொத்தக் கலப்புத் தீவனம் , தீவனத் தொகுதி மற்றும் தீவன சேமிப்பு போன்ற மதிப்புக் கூட்டலுக்கு ஊக்கமளிக்கப்படும். அறுவடை இயந்திரம், மின்சக்தியால் இயங்கும் புல் நறுக்கும் கருவி, இயந்திரங்களை சேமித்து வைக்கும் கிடங்கு, மொத்தக் கலப்புக் தீவனம் உற்பத்தி செய்யும் இயந்திரம், ஜெனரேட்டர் மற்றும் மூலப் பொருட்களை சேமித்து வைக்க 2,000 சதுரடி பரப்பளவில் சேமிப்பு கிடங்கு முதலியவற்றை நிறுவ வேண்டும். மானியம் ரூ. 50 லட்சம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

தனிநபர்கள், விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள் மற்றும் பிரிவு 8ன் கீழ் பதிவுபெற்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான தனியார்கள் மற்றும் நிறுவனங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற்ற நிபுணர்களை கொண்டிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் போதுமான அனுபவத்துடன் தொழில்நுட்ப ஆதரவை பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களால் திட்டத்திற்கான அனுமதிக் கடனைப் பெற்று வரையறுக்கப்பட்ட வங்கியிடமிருந்து உத்தரவாதத்தையும், அந்தக் கணக்கை வைத்திருக்கும் வங்கியால் செல்லுபடியாக்கத்திற்கான மதிப்பீட்டையும் அளிக்க வேண்டும். திட்டம் நிறுவப்படும் இடம் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் இருக்க வேண்டும். கேஓய்சிக்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். தகுதியானவர்கள் என்.எல்.எம்.உதயமித்ரா.இன் என்ற போர்ட்டலில் விண்ணப்பங்களை அப்லோட் செய்ய வேண்டும்.

வங்கி கடன்

பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை வரையறுக்கப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மத்திய அரசு அங்கீகரிக்கப்ப்ட திட்டங்களுக்கான மானியத் தொகையை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் மூலம் பயனாளிகளுக்கு விடுவிக்கும். கடன் வழங்கும் வங்கி கடன் தொகையை விடுவித்ததை உறுதி செய்த பின்பே முதல் தவணை மானியத் தொகை பயனாளிக்கு வழங்கப்படும். பணி மூலதனம், தனிப்பட்ட வாகனம், நிலம் வாங்குதல், வாடகைக்கான செலவு மற்றும் நிலத்தின் குத்தகைக்கு மானியம் வழங்கப்படாது. திட்டத்தின் செயல்பாட்டினை திட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை தொடர்ந்து கண்காணிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Oct 2022 11:53 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...