/* */

பள்ளிபாளையம்: கள்ளத்துப்பாக்கி, மதுபாட்டில் வைத்திருந்த இருவர் கைது

பள்ளிபாளையத்தில், 51 மதுபாட்டில்கள் மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்: கள்ளத்துப்பாக்கி, மதுபாட்டில் வைத்திருந்த இருவர் கைது
X

கடத்தப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் இன்று, பள்ளிபாளையம் கொக்கராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, கொக்கராயன்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்த சக்திவேல்-34, அவரது வீட்டு முன்பு கையில் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கோடீஸ்வரன்-33, என்பவர் கையில் மதுபாட்டிலுடன் இருந்தார். போலீசாரை கண்டதும், இருவரும் தப்ப முயன்றனர்.

சுற்றி வளைத்து அவர்கள் இருவரை பிடித்து விசாரித்ததில், ஊரடங்கில் மதுபான பாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும், அத்துடன், துப்பாக்கி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், துப்பாக்கி, ஏர்கன் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள் கைப்பற்றினர்.

Updated On: 17 Jun 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  2. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  3. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  4. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  5. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  8. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்