/* */

மதுரை அருகே அவனியாபுரம் பகுதியை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் போலீஸார்

அவனியாபுரம் பகுதிகளில் குற்றச் செயல்களை கண்காணிக்க ட்ரோன் காமெரா பயன்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்

HIGHLIGHTS

மதுரை அருகே அவனியாபுரம்  பகுதியை  ட்ரோன் மூலம்  கண்காணிக்கும் போலீஸார்
X

அவனியாபுரத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மதுரை அவனியாபுரத்தில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நடமாடுவதாகவும் மற்றும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது போன்ற செயல்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, மதுரை மாநகர் காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனபோஸ் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க அவனியாபுரம், எச்.பி.காலனி, காமராஜர் நகர்,ஜே.பி.நகர், வள்ளனந்தபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது