Begin typing your search above and press return to search.
நாளை நடக்க உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தயாராகிறது கோயில் காளை
நாளை நடக்க உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கோயில் காளை தயாராகி வருகிறது.
HIGHLIGHTS
மதுரை அருகே உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை திங்கட்கிழமை காலை நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில், தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். விழாவையொட்டி, மதுரை போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனையொட்டி தனிச்சியம் முத்தையா சாமி கோவில் மாடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தயாராகிறது. காளையை, ஜல்லிக்கட்டில் பங்கேற்க, கோயில் கமிட்டியினர் தயார் செய்து வருகின்றனர்.