Begin typing your search above and press return to search.
நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், அடுத்த நம்பியூர் அருகே காமராஜர் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). கூலி தொழிலாளி. குமாருக்கு திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், குமார் வீட்டில் மின் விளக்கை நேற்று சரி செய்து கொண்டிருந்தார். அவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.