Begin typing your search above and press return to search.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே முதியவர் மாயம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்துரை சேர்ந்த முதியவர் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்தூர், பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 74). சம்பவத்தன்று, தனது தங்கை வீட்டிற்கு சென்று வருவதாக, கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் மூர்த்தி அளித்த புகாரின்பேரில் பங்களாப்புதூர் போலீசார் கணேசனை தேடி வருகின்றனர்.