/* */

அந்தியூர் : சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அந்தியூர் அருகே சட்ட விரோதமாக வெவ்வேறு இடங்களில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூர் :  சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிவசக்தி நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (62) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தங்கவேலு கைது செய்த போலீசார், இவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், அந்தியூர் பாலகுட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், மைக்கேல்பாளையம் நஞ்சமடைகுட்டை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தொட்டையன் (32) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மொத்தம் 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...