/* */

மசூதியில் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு....

கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகிய பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்து வெளியேறிய இஸ்லாமிய பெருமக்களிடம் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். 

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 9வது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இஸ்லாமியர்கள் கூடும் இடமான பள்ளிவாசல்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் முன்பு நின்ற வேட்பாளர் செங்கோட்டையன் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார்.

மேலும் இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் வாக்குறுதி வழங்கினார். இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

Updated On: 2 April 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு