/* */

கொரோனாவால் ரேஷன் கடை ஊழியர் பலி…

கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரேஷன் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கொரோனாவால் ரேஷன் கடை ஊழியர் பலி…
X

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஆர்.சவுகத்தலி,49. இவர், சம்பத் நகரில் உள்ள ஸ்ரீநடேசர் கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் எடையாளராக பணி செய்தார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். கொரோனா பரவல் நிலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி, கொரோனா நிவாரண நிதிக்காக வீடுவீடாக டோக்கன் வழங்கும் பணி, 2,000 ரூபாய் வினியோகிக்கும் பணிகளை நிறைவு கொரோனா நிவாரண நிதிக்காக என அனைத்தை வேலைகளையும் நிறைவு செய்தார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து தமிழக அரசு, அவரது குடும்பத்துக்கு முன்களப்பணியாளர்களுக்கு வழங்குவது போல கொரோனா நிவாரண நிதி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

Updated On: 5 Jun 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு