/* */

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நிதி நிறுவன ஊழியர் பலி

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே இரும்பு கம்பியில் துணியை காயவைத்த போது, மின்சாரம் தாக்கியதில் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நிதி நிறுவன ஊழியர் பலி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி மகன் கார்த்திக்ராஜா. நிதி நிறுவன ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். வீட்டில் கார்த்திக்ராஜா நேற்று காலை குளித்து விட்டு, துணியினை இரும்பு கம்பியில் மேல் காயவைத்துள்ளார்.

இரும்பு கம்பியில் ஏற்கனவே மின்கசிவு இருந்த நிலையில், கார்த்திக்ராஜா துணியினை காயவைக்கும் போது மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து, கார்த்திக்ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கார்த்திக்ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 April 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்