/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலி
X

விபத்தில் பலியான தமிழரசன்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்(38). இவர் இன்று காலை பையர்நத்தத்தில் இருந்து இறைச்சி எடுத்து கொண்டு மனைவி பிரியா (26)-வின் கிராமமான மாரியம்பட்டிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது பீணியாற்றின் பாலம் வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோர மைல் கல்லில் பைக் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தமிழரசனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புகாரின்பேரில் அ.பள்ளிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  5. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  6. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை