Begin typing your search above and press return to search.
பாலக்கோடு அருகே கே.பி.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் அதிமுகவில் இணைவு
பாலக்கோடு அருகே முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட திண்டல் ஊராட்சியில் ஒடசகரை கிராமத்தில் பாமக வில் இருந்து விலகி தருமன் மற்றும் சுரேஷ் தலைமையில் முன்னாள் அமைச்சர் ,தருமபுரி மாவட்ட கழக செயலாளர், பாலகோடு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்கள் முன்னிலையில் 30 மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.செந்தில்குமார்,மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சின்னசாமி , வழக்கறிஞர் பாரதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைசெயலாளர் வ.விஜயகுமார், சொக்கலிங்கம், சரவணன் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் பெ.தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்