/* */

'ரிஸ்க்' எடுப்பது 'ரஸ்க்' சாப்பிடுவது போல... டிராக்டரில் திக் திக் பயணம் செய்யும் மக்கள்!

மொரப்பூர் பகுதிகளில் டிராக்டர்களில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

ரிஸ்க் எடுப்பது ரஸ்க்  சாப்பிடுவது போல... டிராக்டரில் திக் திக் பயணம் செய்யும் மக்கள்!
X

தருமபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கரும்பு மற்றும் மரவள்ளி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் விளைகின்ற தங்களது பொருட்களை, சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று சந்தைகளில் விற்பனை செய்வது வழக்கம்.

இத்தகைய பொருட்களை எடுத்துச்செல்லும்போது, அளவுக்கதிகமாக சரக்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்வதோடு, அதன் மீது ஆட்களை அமரச் செய்து ஏற்றிச் செல்கின்றனர். இத்தகைய 'சாகசப் பயணம்' செய்வது காண்போரை பீதிக்குள்ளாகுகிறது.
வளைவில் திரும்பும்போதோ, அல்லது திடீரென பிரேக் பிடிக்கும் போதோ பயணிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இது போன்ற பயங்களை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
எனினும், விவசாயிகள் அதனை கடைப்பிடிக்காமல் இருந்து வருவது கவலை அளிக்கிறது. எனவே, ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து, ரிஸ்க் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Updated On: 19 April 2021 3:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது