/* */

சிவகாசி: சாலையோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

பேருந்தில் குறைவான பயணிகள் இருந்ததும், முன் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும் நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

HIGHLIGHTS

சிவகாசி: சாலையோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
X

விபத்து ஏற்பட்ட பஸ் மற்றும் லாரி.

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரம் பகுதியில் இருந்து, சிவகாசிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை சாத்தூர் அருகேயுள்ள கோணம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (41) ஓட்டி வந்தார். சிவகாசி பேருந்து நிலையம் செல்லும் புறவழிச்சாலையில் பேருந்து சென்ற போது, திடீரென்று அரசு பேருந்தின் முன்பு ஒரு லாரி வந்தது. விபத்தை தவிர்ப்பதற்காக பேருந்து ஓட்டுநர் சட்டென்று பேருந்தை இடது பக்கமாக திருப்பியுள்ளார்.

அப்போது அங்கு சரக்கு இறக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது, அரசுப் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. மேலும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகேயிருந்த 2 இருக்கைகள் முற்றிலும் சேதமானது. பேருந்தில் குறைவான பயணிகள் இருந்ததும், முன் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும் நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டுநர் செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 April 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு