/* */

பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது : விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை 5 மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றி பெறும். என்றார்

HIGHLIGHTS

பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது : விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்
X

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம்  தாகூர்

பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது என்றார் விருதுநகர் பாரளுமன்ற தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது. பாஜக தமிழகத்தில் அரசியலானது பணத்தை வைத்துக்கொண்டு செய்து வருகின்றனர். பணத்திலும், சாவிலும் தமிழகத்தில் அரசியல் செய்கின்றனர். அமித் ஷாவின் அரசியலை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த ஹிஜாப் நிகழ்வு குறித்து, தனசேகரனின் மனைவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஜக மாநில நிர்வாகி 2லட்சம் பணம் கொடுத்து இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இதனை அவமதித்து பேசுகின்ற பொன்ராதாகிருஷ்ணன் தரம் தாழ்ந்து இருப்பதாகவும், அவர்கள் போடும் வேஷங்கள் இப்பொழுது தெளிவாக தெரிகிறது , சங்கியாக பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை 5 மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றி பெறும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பொருத்தமட்டில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளிலும் முன்னின்று செய்து வருகின்றது. பாஜகவை வீழ்த்துவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றார் எம்பி மாணிக்கம்தாகூர்.


Updated On: 21 Feb 2022 2:08 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது