/* */

பெரணமல்லூரில் தார்சாலை, கால்வாய் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

பெரணமல்லூரில் தார்சாலை, கால்வாய் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பெரணமல்லூரில் தார்சாலை, கால்வாய் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு
X

பெரணமல்லூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் வேணி ஏழுமலை தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தமிழரசி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் மகேந்திரன் வரவேற்று திட்ட அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் 10-வது வார்டு பூத்தங்குட்டை வீதியில் புதிய தார் சாலை அமைப்பது, 11-வது வார்டு முத்து நகரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது.

வார்டு கவுன்சிலர்கள் கூறிய பகுதியில் மின்சார பல்புகள் பொருத்துவது, குடி தண்ணீர் தேவையை அறிந்து அந்த பகுதியில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. முடிவில் வார்டு கவுன்சிலர் சண்முகம் நன்றி கூறினார்.

Updated On: 26 April 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!