/* */

இருசக்கர வாகனம் திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது

திருவண்ணாமலை மாடவீதியில் இருசக்கர வாகனம் திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்

HIGHLIGHTS

இருசக்கர வாகனம் திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது
X

திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42), விவசாயி. இவர் மாலை திருவண்ணாமலை மாடவீதியில் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று இருந்தார். பின்னர் வந்து பார்க்கும்போது அவரது மோட்டார் சைக்கிளை 3 சிறுவர்கள் திருட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்றதில் ஒரு சிறுவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேர் சிக்கினர்.

பின்னர் அவர்களை திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட 2 சிறுவர்களில் ஒருவருக்கு 17 வயதும், மற்றொருவருக்கு 16 வயதும் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகின்றனர்.

Updated On: 24 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  2. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  4. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்