/* */

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்
X

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண் சாமியார் ஒருவர் சாமி தரிசனம் செய்தார். அவர் சாதாரண சாமியார்களை போன்று இல்லாமல் நவநாகரீக உடையில் வந்திருந்தார். கழுத்து நிறைய நககைளையும், கண் இமையிலும், உதட்டிலும் சாயம் பூசி இருந்தார். அவர் அகில இந்திய யுவமோட்சா தர்மச்சாரியா பட்டம் பெற்றவர் என்றும், அவரது பெயர் ஸ்ரீபவித்ரா காளிமாதா என்றும் அவருடன் வந்த சீடர்கள் தெரிவித்தனர். சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் கோவிலில் பக்தர்களுக்கு குங்குமம் வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஈசன் என்னை அழைத்ததால் இந்த பூமிக்கு வந்து உள்ளேன். இனி திருவண்ணாமலையில் நல்லதே நடக்கும். ஒருவருக்கு தண்டனை கொடுப்பதற்கு ஈசன் காளியைத் தான் அனுப்புவார். ஈசனிடம் வரம் பெற்று அதை நல்வழியில் பயன்படுத்தாமல் தீயவழியில் பயன்படுத்துவர்களை அழிப்பதற்காக இந்த எல்லைக்கு காளிமாதா வந்து இருக்கேன் என்றார். மேலும் நான் சாமியார் இல்லை. ஈசனும், மாதாவும் சொல்லும் வேலையை செய்வேன் என்றார். தொடர்ந்து அவர் கோவிலில் இருந்த பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி விட்டு சென்றார்.

Updated On: 27 Nov 2021 1:10 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  4. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  5. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  6. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  7. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  9. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  10. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக