மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
மாணவியை கடத்தி பாலியல் தொல்லை தந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் கிராமம் வஜ்ரம் நகரை சேர்ந்தவர் தினகரன். வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவியை மிரட்டி தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு காரில் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ளும்படியும், பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சலிட்டார்.
பின்னர் மாணவியை அவரது கிராமம் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் . அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் தினகரன் மீது போக்சோ மற்றும் கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற கார் டிரைவர் தினகரனை தேடி வருகின்றனர்.