Begin typing your search above and press return to search.
சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலப் பாதையில் அன்னதானம் செய்ய விதிமுறைகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விதிமுறைகள் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
- திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்புவோர் ஏப்ரல் 14 க்கு முன்பு அனுமதி பெற வேண்டும்.
- கிரிவலப்பாதையில் தற்காலிக கடை திறக்கும் உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையிடம் முறையாக உரிமம் பெற வேண்டும்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.
- அன்னதானம் வழங்க தென்னை பாக்கு மட்டை பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- குப்பையை சொந்தப் பொறுப்பில் அகற்ற வேண்டும்
- அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு உரிமம் பெற்று, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அன்னதானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக https:/foscos.fssai.gov.in என்ற இணையத்தின் மூலமாகவும் , நியமன அலுவலர் அலுவலகம் பழைய அரசு மருத்துவமனை வளாகம் செங்கம் ரோடு திருவண்ணாமலை என்ற முகவரியில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
தொலைபேசி எண் 04175 - 237416, 9865689838, 9047749266
அனுமதியின்றி யாரேனும் அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது