மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
மின் கட்டண உயர்வை திரும்ப பெறவும், மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்வதை உறுதி செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெருந்திரள் முறையீடு மனு கொடுக்கும் போராட்டம் இன்று திருவண்ணாமலை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எம்.பிரகலாநாதன் வரவேற்றார்.
இதில் தமிழக அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.பாலாஜி, எஸ்.லூர்துமேரி, டி.கே.வெங்கடேசன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் ஆர்.சிவராஜ், சி.ஐ.டி.யு. நிர்வாகி ஆர்.கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை அலுவலகத்தில் 135 ஆட்சேபனை மனுக்களை வழங்கினர்.