/* */

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல்

ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் 1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 35, ஆகிய 36 பதவி இடங்களை நிரப்புவதற்கு தேர்தல் கால அட்டவணை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 20.6.22 முதல் 27.6.22 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகின்றது. வேட்புமனு பரிசீலனை 28 ம் தேதி அன்று நடைபெறும். 30 ஆம் தேதி அன்று பிற்பகல் மூன்று மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9 ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

பதிவான வாக்குகளில் எண்ணிக்கை 12 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நன்னடத்தை விதிகள் தேர்தல் முடிவு வரும் நாளான 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...