திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
Meeting News- திருவண்ணாமலையில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Meeting News- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தாட்கோ கடன் மகளிர் சுய உதவி குழு கடன், பட்டுப்புழு வளர்ப்பு கடன், கைத்தறி கடன் வேளாண் விற்பனைத்துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மாநிலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சையித்து சுலைமான், வேளாண்மை துறை துணை இயக்குனர் மாரியப்பன், கைத்தறி உதவி இயக்குனர் இளங்கோ, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, தாட்கோ மேலாளர் ஏழுமலை, உள்பட அரசு துறை அலுவலர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2