/* */

கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலையில் அரசின் உத்தரவை மதிக்காமல் அரியர் தேர்வு கட்டணத்தை மீண்டும் செலுத்த வற்புறுத்தும் திருவள்ளுவர் பல்கலைகழகத்தை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள் கல்லுாரி நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு அரசு கலை கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் மற்றும் அரியர் தேர்வர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அரியர் தேர்வு நாளை முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ள நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவர்களை மீண்டும் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தமிழக அரசின் அரியர் தேர்வர்கள் ஆல் பாஸ் என்ற உத்தரவை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமல்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் ஏற்கனவே செலுத்தப்பட்ட அரியர் தேர்வு கட்டணத்தில் மீண்டும் அரியர் தேர்வை நடத்திட கோரியும் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் கல்லூரியை புறக்கணித்து நுழைவாயில் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Feb 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...