/* */

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் இன்று போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

 போக்குவரத்து காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீர்மோர் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயிலால், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கொளுத்தும் வெயிலில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் தங்களது கடமைகளை செய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தின் காரணமாக காவலர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், சாலைகளில் வெப்ப அலையானது கடுமையாக வீசி வருகிறது.

இந்த நிலையில், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது கொழுத்தும் வெயிலில் தங்களது கடமைகளை செய்து போக்குவரத்தை சீர் செய்து வரும் காவலர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் உள்ளிட்டவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் இன்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்களுக்கு நீர் மோர் வழங்கி இந்த பணியை தொடங்கி வைத்த நிலையில், வெயில் காலம் முடிவடையும் வரை நாள்தோறும் இரண்டு வேளைகள் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ் வழங்க தென்காசி மாவட்டம் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 April 2024 12:53 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா