/* */

முக்கிய கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய கட்சி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இல்லாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை

HIGHLIGHTS

முக்கிய கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை
X

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்.19-ந்தேதி நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆரணி நகர மன்றத் தேர்தலில் 11 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்

பிரதான கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை அந்தந்த மாவட்ட அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாளை மறுதினம் அமாவாசை தினம் என்பதாலும் கடந்த இரண்டு நாட்களாக ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.

இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறுகையில், போதிய கால அவகாசம் இல்லாததால் மனுதாக்கல் உடன் அளிக்க வேண்டிய ஆவணங்களை சேகரித்து, சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தனர்.

நாளை விடுமுறை தினம் என்பதால் நாளை மறுதினம் உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 29 Jan 2022 1:59 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  9. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...