/* */

திருவண்ணாமலை அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

திருவண்ணாமலை அருகே, ரூ.3 லட்சம் பணத்துக்காக மனைவியை எரித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே மனைவியை  கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
X

கொலை செய்யப்பட்ட கவுதமி

திருவண்ணாமலை அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் ராஜா (வயது 32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவுதமி (28) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கவுதமியின் தாய், தனது மகள் கஷ்டப்படக்கூடாது என்று வெளிநாட்டில் வேலை பார்த்ததில் கிடைத்த ரூ.3 லட்சத்தை கவுதமிக்கு அனுப்பியுள்ளார்.

இதையறிந்த ராஜா, ரூ.3 லட்சத்தையும் தன்னிடமே தர வேண்டும் என்று கேட்டுள்ளார். கவுதமி மறுக்கவே, இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. பின்னர் வெளியில் சென்ற கவுதமி, வீடு திரும்பவில்லை. குடும்பத் தகராறு காரணமாக, மனைவி மாயமாகி விட்டதாக, கணவர் ராஜா தெரிவித்தார்.

இதனிடையே, மாயமான கவுதமி கரும்புத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கவுதமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவியை எரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 7 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  3. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  5. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  6. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  7. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  9. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  10. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!