செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் மோசடி: எம்எல்ஏ குற்றச்சாட்டு

முந்தைய ஆட்சியில் செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் ரூபாய் 5 கோடி மோசடி நடந்துள்ளதாக செய்யாறு எம்எல்ஏ உறுப்பினர் ஜோதி குற்றச்சாட்டு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு பகுதி ஏரி குடிமராமத்து பணிகளில் மோசடி: எம்எல்ஏ குற்றச்சாட்டு
X

செய்யாறு ஏரியில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ஜோதி 

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல ஏரிகளில் முந்தைய ஆட்சியில் குடிமராமத்து பணி மேற்கொண்டதில் ரூபாய் 5 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளதாக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி குற்றம் சாட்டினார்

செய்யாறு ஏரியில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது, அதிமுக ஆட்சியில் வட தண்டலம் கிராமத்தில் நிலமே இல்லாத ஒருவரை போலியாக தயார் படுத்தி பதிவு செய்து பின்னர் பாசன சங்க தலைவராக நியமித்து ரூபாய் 35 லட்சத்தில் குடிமராமத்து என்ற பெயரில் அரைகுறையாக வேலை செய்து பணத்தை மோசடி செய்துள்ளனர். ஏரி கால்வாய்களும் சீரமைக்கப்பட வில்லை. கரைகளை பலப்படுத்த படவில்லை.

இதனால் வீணாக நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த தொகுதியில் செய்யாறு, பாலாறு, பெரணமல்லூர் என மூன்று பிரிவுகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பல ஏரிகளின் இங்கே ஆட்சியில் 50 சதவீத அளவு கூட பணி செய்யாமலேயே மழை நாட்களில் கணக்கு காட்டி 5 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இந்த மோசடி குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மூலமாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன் என்றார்.

Updated On: 29 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...