/* */

சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பு: விவசாயிகள் சாலை மறியல்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் எனக்கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பு: விவசாயிகள் சாலை மறியல்
X

ஊர்வலமாக வந்த விவசாயிகள்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் என கூறி டிராக்டரில் அணிவகுத்து சென்ற விவசாயிகள் ஊர்வலமாக சென்றதை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரியிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாங்கால் கூட்ரோடு பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்ய அருகில் அமைந்துள்ள கிராமங்களான அத்தி, இளநீர்குன்றம், நர்மா பள்ளம், மேல்மா, தேத்துறை, குரும்பூர், வீரம்பாக்கம், வட ஆளப்பிறந்தான், நெடுங்கல் ஆகிய 9 ஊர்களில் சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தின் மூலம் நடைபெற்று வந்தன.

மேலும் கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர் பெயருடன் அறிவிப்பு வெளியிட்டு ஆட்சேபணை ஏதும் இருப்பின் தெரிவிக்கலாம் என வருவாய் துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தை நோக்கி ஆட்சேபனை மனு அளிப்பதற்காக டிராக்டர்களில் விவசாயிகள் அணிவகுத்து சென்றனர்.

அங்கு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பழனி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினா். செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே டிராக்டர்களை தடுத்தனர். அதன் பின்னா் விவசாயிகள் செய்யாறு - வந்தவாசி சாலையில் எருமைவெட்டி கூட்டுச் சாலையில் இருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை அலுவலகத்துக்கு நடைபயணமாகச் சென்றனா்

விவசாயிகள் செய்யாற்று மேம்பாலம் அருகே சென்றபோது சிப்காட் அலுவலகம் செல்லாமல், சாா் -ஆட்சியா் அலுவலகம் செல்ல முயன்றனா். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினா். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா். சமாதானத்தை ஏற்ற விவசாயிகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்றனர். பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அலுவலகத்திற்குள் செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்தது. இதனை பார்த்த விவசாயிகள் மீண்டும் ஆவேசம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா செய்தனர். அவர்களிடம் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பகுதிக்கு வந்த செய்யாறு சாா்- ஆட்சியா் அனாமிகாவிடம், விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய இருபது அம்ச கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், அதுவரை நிலம் எடுப்பு தொடர்பாக பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்து மனு அளித்தனர். இச்சம்பவத்தால் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 12 July 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  5. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  7. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!