திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊா்வலங்கள் நடைபெற்றன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
X

சேத்துப்பட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊர்வலம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டு, செங்கம் ஆகிய இடங்களில் தேசிய மின் சிக்கன வார விழாவையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலங்கள் நடைபெற்றன.

செய்யாறு கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் பெரியார் சிலை அருகில் தொடங்கியது. ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் வள்ளிகாந்தன், தெய்வசிகாமணி, பாண்டியராஜன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலத்தில் இளநிலை உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், களப்பணியாளர்கள், ஐடிஐ மாணவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி சாலை, பஸ் நிலையம் ஆற்காடு சாலை வழியாக செய்யாறு மின்வாரிய அலுவலகத்திடம் நிறைவடைந்தது.

ஆரணி

ஆரணியை அடுத்த சேத்துப்பட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை செயற்பொறியாளா் ரவிச்சந்திரபாபு தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

தேவையான போது மட்டுமே மின்விளக்குகள், மற்றும் மின்விசிறிகள், பயன்படுத்த வேண்டும், சுவிட்சுகள், பிளக்குகள், போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். இடி மின்னலின் போது மின்சார சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட மின்சார பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பதாகளை ஏந்தியவாறு மின்சார வாரிய ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

உதவி செயற்பொறியாளா்கள் பக்தவச்சலம், ஏழிலரசி, ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பொறியாளா் மோகன் வரவேற்றாா். இதில் மின் வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கம் நகரில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை பொறியாளா் சங்கரன் தொடக்கிவைத்தாா். உதவி செயற்பொறியாளா்கள் இளங்கோவன், மூா்த்தி, இளநிலைப் பொறியாளா்கள் நெடுஞ்செழியன், மூா்த்தி, உதயகுமாா், ரங்கநாதன் உள்பட செங்கம், மேல்பள்ளிப்பட்டு, மேல்செங்கம், பரமனந்தல், புதுப்பாளையம், காஞ்சி, பாய்ச்சல் துணை மின் நிலையங்களைச் சோந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 20 Dec 2022 1:32 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...