/* */

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்

மருத்துவமனைக்கு சென்று வருவதாக மகனிடம் சொல்லி விட்டு வெளியே சென்ற மூதாட்டி வாகனம் மோதி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்
X

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலித்தொழிலாளி. இவரின் தாயார் நாகம்மாள் (வயது 80). இவர் நேற்று மருத்துவமனைக்கு சென்று வருவதாக மகனிடம் சொல்லி விட்டு வெளியே சென்றார்.

ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. இந்தநிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ராஜேந்திரனுக்கு போன் செய்து உனது தாயார் நாகம்மாள் தூசி அருகே ஆக்கூர் கூட்டுச்சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடப்பதாக கூறினார்.

இதையடுத்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நாகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 May 2022 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  5. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  6. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  7. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  8. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  9. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  10. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...