Begin typing your search above and press return to search.
கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிப்பு
திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவலர்கள் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் கொட்டி அழிப்பு
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மது விலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தானிப்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை வனப்பகுதியில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.