/* */

செங்குன்றம் அருகே லாரி நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல்

செங்குன்றம் அருகே லாரி நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

செங்குன்றம் அருகே லாரி நடுரோட்டில் கவிழ்ந்ததால்  போக்குவரத்து நெரிசல்
X

செங்குன்றம் அருகே நடுரோட்டில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புறவழிச்சாலை வாகனங்களின் போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய சாலை. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை என்பதால் கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது லாரிகள் அதிகளவில் பயணிக்கும் சாலை. அரிசி ஆலையில் இருந்து உமி ஏற்றிய லாரி ஒன்று செங்குன்றத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது சோத்துப்பாக்கம் சந்திப்பின் அருகே ஜி.என்.டி சாலையில் கார் ஒன்றில் மோதியதால் சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் செங்குன்றத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் ஊர்ந்து சென்றன. சாலையில் கவிழ்ந்துள்ள லாரியை மீட்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

Updated On: 2 Sep 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு