/* */

திருவள்ளூர்: கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை..!

திருவள்ளூர், தேவி மீனாட்சி நகர் பகுதியில் கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை.

HIGHLIGHTS

திருவள்ளூர்: கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை..!
X

திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் பிரஷாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி பிரஷாந்த் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இதனால் மனவேதனை அடைந்த அவரது மனைவி 65 வயது மூதாட்டி தன்னுடைய கணவர் இறந்த நாள் முதல் துக்கம் தாங்கமுடியாமல் வருத்தத்தில் இருந்து வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் தன்னுடைய கணவரை நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த மூதாட்டி கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jun 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு