/* */

தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கல்

திருவள்ளூர் அருகே தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

HIGHLIGHTS

தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கல்
X

திருவள்ளூரில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை அடுத்த காவிரி ராஜபேட்டை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக வீடியோ வைரலானது.

கோவிந்தராஜ் என்பவரது மகள் சிவகாமி என்பவர் பொதட்டூர்பேட்டை அடுத்த நடுத்தெரு நியாய விலைக் கடையில் காசாளராக வேலை செய்து வருவதாகவும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச ரேஷன் அரிசியை ரேஷன் கடை ஊழியரே ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருக்கிறாரா? அல்லது வேறு யாரேனும் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறாரா? அரசின் முத்திரையுடன் கோனிப் பைகளில் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என பொது மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்