/* */

புழல் மத்திய சிறையில் கைதி சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது

புழல் மத்திய சிறையில் கைதி சந்திக்க வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

புழல் மத்திய சிறையில் கைதி சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது
X

சதீஷ்குமார்.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைகளில் உள்ள கைதிகளை காலையில் அவர்களின் உறவினர்களும், மாலையில் வழக்கறிஞர்களும் சந்திப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை விசாரணை சிறையில் உள்ள கைதி ஒருவரை சந்திக்க வழக்கறிஞர் எனக்கூறி ஒருவர் வந்தார். அவரது பேச்சு நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் அவரின் அடையாள அட்டையை சோதனை மேற்கொண்டதில் போலி அடையாள அட்டை என தெரிய வந்தது.

இதனையடுத்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடத்திய விசாரணையில் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. வழக்கறிஞர் என்ற போர்வையில் புழல் சிறைக்குள் செல்ல முயன்ற நபரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 19 March 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!