/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,100 கிலோ கஞ்சா பறிமுதல்; 300 வழக்குகள் பதிவு

Ganja Crime -திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,100 கிலோ கஞ்சா பறிமுதல்; 300 வழக்குகள் பதிவு
X

தனியார் கல்லூரி மாணவர்களிடையே காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Ganja Crime -திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவர்களிடையே காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா, மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஷ்கல்யாண் ஆகியோர் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பேசிய காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சத்திய பிரியா, திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருள் அண்டை மாநிலங்களில் இருந்து மாவட்டத்திற்கு வருவதை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கஞ்சா வேட்டை ஒன்று மற்றும் இரண்டில் இதுவரை 1,100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, கஞ்சாவுக்கு மட்டுமே 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் 65 குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் திருவள்ளூர் மாவட்டத்தில் முடக்கப்பட்டு, எங்கிருந்து பணம் வருகிறது யார் கொடுக்கிறார்கள் என்பதை புலனாய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் நபர் யார் என முழு விபரத்தையும் பெற்று அதிகபட்ச தண்டனையாக குண்டர் சட்டத்தில் அடைக்கும் நடைமுறையும் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல் முறைப்படுத்தி வருவதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 23 Sep 2022 9:49 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!