/* */

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

மதுரவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை; மாத்திரை சாப்பிடவில்லை என பெற்றோர் திட்டியதால் நேர்ந்த சோகம்.

HIGHLIGHTS

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
X

மதுரவாயல் அடுத்த நூம்பல், செல்வ கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி இவருக்கு பிரபாவதி(25), என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருப்பசாமி ராமாபுரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று காலையில் வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது பிரபாவதி வீட்டில் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன பிரபாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரபாவதிக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதால் மாத்திரை சரிவர சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கருப்பசாமி அவரது மாமியாரிடம் தெரிவித்ததையடுத்து பிரபாவதியின் தாய் தனது மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரபாவதி தற்கொலை செய்துகொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் திருமணமாகி 6மாதங்கள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 April 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்