/* */

பூந்தமல்லி: பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை திருடுவதில் ஆர்வம் காட்டிய போலீஸ்

பூந்தமல்லியில் பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை திருடுவதில் ஆர்வம் காட்டிய போலீஸ்காரரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பூந்தமல்லி: பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை திருடுவதில் ஆர்வம் காட்டிய போலீஸ்
X

பூந்தமல்லியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் வேனில் தர்பூசணி எடுக்கும் காட்சி

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பூந்தமல்லி மேம்பாலம் அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து உரிய ஆவணங்களின்றி வரும் வாகனங்களை மடக்கி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் லோடுவேனில் தர்பூசணி பழம் வைத்திருந்த வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதனை கண்டு அங்கு பணியில் இருந்த போலீஸ்கார் ஒருவர் பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் அங்கு சென்று அந்த வண்டியில் இருப்பதிலேயே பெரிய தர்பூசணி பழத்தை எடுக்க முயற்சி செய்கிறார்.

இறுதியாக வாகனங்களில் பக்கவாட்டில் உள்ள சிறிய கம்பி வழியாக தனது இரண்டு கைகளை விட்டு தர்பூசனி மேலே எடுக்க முயற்சி செய்தபோது அது வராததால் அதனை அப்படியே அங்கிருந்து உருட்டி வருகிறார்.

அங்கு நிற்கும் மற்றொருவர் அந்த தர்பூசணி பழத்தை எடுத்து போலீசாரிடம் கொடுக்கிறார். போலீசாரும் அந்த தர்பூசணியை பணம் கொடுத்து வாங்கிச் சென்றது போல மிகவும் சந்தோஷமாக எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் பணியில் இருக்கும்போதே சீருடை அணிந்தபடியே போலீசார் ஒருவர் வாகனத்தில் இருந்து தர்பூசணியை திருடி செல்லும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 19 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!