/* */

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஆவடி அருகே சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நபர், கடந்த 23ஆம் தேதி மதியம் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, தனது மகள் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில், மகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் திருமுல்லைவாயில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வேப்பம்பட்டை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் தமிழரசன், சிறுமியிடம் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் இருந்த தமிழரசனை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 April 2022 2:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்