Begin typing your search above and press return to search.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்ப மனு பெற்றார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்ப மனுக்களை பெற்றார்.
HIGHLIGHTS
திருச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள வி.என்.நகரில் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பள்ளி கல்வி துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ, இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ, கே.என்.சேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது விருப்ப மனுக்களை வாங்கி, பூர்த்தி செய்து கொடுத்தனர்.