/* */

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டம்
X

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அங்கு வந்திருந்த விவசாய சங்கத் தலைவர்கள் திடீரென கூட்டம் நடந்த அரங்கை விட்டு வெளியேறி கலெக்டர் அலுவலக வாயில் முன்பாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் அய்யாகண்ணு( தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்), விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்) மற்றும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை, துரைராஜ் உள்பட அனைத்து விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jun 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...