Begin typing your search above and press return to search.
தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்
தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தமிழக அரசு நியமித்தது.
HIGHLIGHTS
கன்னியாகுமரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா, அம்மா இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியைத் தொடங்கினார்.
2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓவாகப் பணியாற்றியுள்ளார். 2007 மதுரை மேற்கு இடைத்தேர்தலில், தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
மதுரை டி.ஆர்.ஓ-வாகவும், பொறுப்பு கலெக்டராகவும் செயலாற்றியுள்ளார். 2012-ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்ஸாகப் பதவி உயர்வு பெற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.