/* */

ஆலங்குடி அருகே சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆலங்குடி அருகே  சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்
X

ஆலங்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ததை கண்டித்து சாலையில்  நெல்லைக் சாலையில் கொட்டி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. அனைத்து விவசாயிகளும் நெல்லை விற்பனைக்கு கொண்டு வரும் முன்னரே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இதனால், கடந்த 15 நாட்களாக அறுவடை செய்த நெல் மழையில் நனைந்தபடி இருப்பதாகக் கூறி விவசாயிகள் அணவயல் பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் நெல்லை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 9 Aug 2021 1:32 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு