/* */

கொல்லிமலையில் திருச்செங்கோடு தொழிலாளி திடீர் உயிரிழப்பு

திருச்செங்கோட்டை தொழிலாளி கொல்லிமலையில் திடீரென உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் திருச்செங்கோடு தொழிலாளி  திடீர் உயிரிழப்பு
X

திருச்செங்கோட்டை தொழிலாளி கொல்லிமலையில் திடீரென உயிரிழந்தார்.

திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50), தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கொல்லிமலைக்கு சென்றார். அப்போது அரப்ப ளீஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஒரு கொட்டகையில் அனைவரும் தங்கியிருந்தனர். இந்த நிலையில் சண்முகசுந்தரம் தனக்கு உள்ள, குடிப்பழக்கத்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்றும், குடியை நிறுத்துவதற்கு, கொல்லிமலையில் கையில் கயிறு கட்டிச் செல்லவேண்டும் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். அடுத்த நாள் காலையில் கயிறு கட்டிக் கொள்ளலாம் என்று நண்பர்கள் கூறியுள்ளனர். அடுத்த நாள் காலை தூங்கிக் கொண்டிருந்த, சண்முகசுந்தரத்தை எழுப்பியதில் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் திடீரென இறந்து கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் சண்முகசுந்தரம் கொல்லிமலைக்கு வரும்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகவும், அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்றும் தெரிகிறது. தொழிலாளி திடீர் சாவு குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?