/* */

ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

ராசிபுரம் தாலுக்கா பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில், ராசிபுரம் தாலுக்காவில் உள்ள ராசிபும், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி இன்று 10ம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது. வட்டார வள மையத்துக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஆக.31 ஆம் தேதி வரை இப்பணி நடைபெறுகிறது. இப்பணியில், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட டவுன் பஞ்சாயத்து வார்டுகள், கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் இப்பணி நடைபெறுகிறது. இதில், 6 முதல் 18 வயது வரையுள்ள, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட உள்ளனர். கண்டறியப்படும் குழந்தைகள், இலவச கட்டாய கல்வி சட்டத்தில், பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள், இது குறித்து அருகில் உள்ள உள்ள அங்கன்வாடி மையம், பள்ளிகள் மற்றும் வட்டார வள மையத்தில் தகவல் தெரிவித்து உதவலாம் என மையங்களின் மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது