/* */

தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா

இராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா
X

தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழாவில் ராசி சீட்ஸ் நிறுவன தலைவர் ராமசாமி பேசினார்.

தொ.ஜேடர்கபளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1950-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளியின் மையக் கட்டடம் பழுதடைந்திருந்தது. இதையொட்டி, வக்கீல் செங்கோட்டுவேல் நினைவாக அக்சென் அறக்கட்டளையால் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டிடம் சீரமைத்து தரப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு ராசி சீட்ஸ் விதை நிறுவனத்தின் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியர் ஜோதிகண்மணி வரவேற்றார். தனலட்சுமி செங்கோட்டுவேலு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் மணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காசிவிஸ்வநாதன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி முத்துநல்லியப்பன், அறக்கட்டளை இயக்குநர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்