/* */

லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் ஓடும் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
X

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் ஓடும் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ( கோப்பு படம்)

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் ஓடும் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் ராகவன்நாயர். இவர், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சென்னம்மாள்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ராகவன் நாயருக்கு உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 7ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்தவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒன்பதாம் தேதி அதிகாலை அவர் மருத்துவமனை முன்பு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்து அந்த வழியாக சென்ற லாரியின் முன் சக்கரத்தில் விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நோய் கொடுமை தாங்காமல் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு என்ன காரணம் என விசாரித்து வருகின்றனர். மருத்துவத்துறையில் பணியாற்றிய ஊழியர் நோய் கொடுமையில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை முன்பே இருந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 May 2024 2:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...