/* */

ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
X

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பள்ளிகளின் பேருந்து மற்றும் இதர வாகனங்களுக்கு கூட்டாய்வு நடைபெற்றது.

ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட ஆரணி, போளூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செலும் பஸ்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்பு உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஆரணி வட்டங்களைச் சோ்ந்த 50 தனியாா் பள்ளிகளில் 339 பேருந்துகள் உள்ளன. இதில் வியாழக்கிழமை 120 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது . ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் பஸ், வேன்களை ஆய்வு செய்தார்.

ஆய்வில் பேருந்துகளில் மஞ்சள் கலர், ஒளிரும் ஸ்டிக்கர், மாணவர்களுக்கு வசதியான படிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளனவா என விதிமுறைகள் குறித்து அனைத்து பஸ்களையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, குறைபாடுகளை சுட்டிகாட்டி, குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது, பஸ்களில் அனுபவமுள்ள டிரைவர்களை வரவழைத்து. அவர்களின் அனுபவம், வயது, ஓட்டுனர் உரிமம் உள்ளதா என கேட்டறிந்தார்.

அப்போது, 5 பஸ்களில் பாதுகாப்பு உறுதித்தன்மை மற்றும் குறைபாடுகள் அதிகமுள்ளதை சுட்டிகாட்டி, மீண்டும் பஸ்சில் குறைகளை முழுமையாக சரிசெய்து பின்னரே, ஆய்விற்கு கொண்டுவருமாறு ஆர்டிஓ உத்தரவிட்டார்.

. தொடர்ந்து, பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு நிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் பஸ், வேன்களில் தீ விபத்துகள் ஏற்பட்டால் தீயை அனைப்பது, தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், டிஎஸ்பி ரவிச்சந்திரன், தீயணைப்பு துறை நிலை அலுவலர் கோபாலகிஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன். போக்குவரத்து, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 May 2024 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு