/* */

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பான பணி: நர்சுகளுக்கு பாராட்டு

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை நர்சுகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பான பணி: நர்சுகளுக்கு பாராட்டு
X

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை நர்சுகளைப் பாராட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, பிள்ளாநல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ராசிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி, நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய 100 நர்சுகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பழகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நர்சுகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மண்டல உதவி கவர்னர் குணசேகர், ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மேன் பாலாஜி, செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் கண்ணன், அரசு ஆஸ்பத்திரி அலுவலர்கள் கலைசெல்வி, செல்வி, தயாசங்கர், செந்தில்குமார், ரமேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Aug 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது